Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாவூர்சத்திரம்: ஒரிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் பூரண குணமடைய வேண்டி தோரணமலை முருகன் கோயிலில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. தென்காசி மாவட்டம் தென்காசி- கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அகஸ்தியர், தேரையர் உள்ளிட்ட சித்தர்களும், முனிவர்களும் வழிபட்ட பெருமையும், சிறப்பு உடையதாகும்.
இக்கோவிலில்வைகாசி மாத பௌர்ணமியையொட்டி கிரிவலம் வந்தனர்.கிரிவலம் முடிந்த பின்பு ஒரிசா ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண குணம் பெறவும், விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைந்து மோட்சம் பெறவும், இது போன்ற விபத்துக்கள் நடைபெற கூடாது என வேண்டுதலோடு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பிரார்த்தனையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.